Print this page

அரசியல் அனுபவமுள்ளவர்களை ஆளுநர்களாக நியமிக்க ஜனாதிபதி ரணில் முடிவு

November 09, 2022

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது முன்னோடியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட தற்போதைய ஆளுநர்களுக்குப் பதிலாக ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிக்க ஆலோசித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆளுநர் என்பது மாகாண சபைகள் மீது நிறைவேற்று அதிகாரங்களை செலுத்துவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்படும் பதவியாகும். மாகாண சபையினால் நிறைவேற்றப்படும் எந்தவொரு சட்டமும் சம்பந்தப்பட்ட ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின்னரே நடைமுறைக்கு வரும்.

இந்த நாட்களில் மாகாண சபைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லாத நிலையில், ஆளுநர்கள் அவர்களின் விவகாரங்களில் முழு அதிகாரத்தையும் செலுத்துகின்றனர்.

அரசியல் அனுபவமுள்ளவர்களை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆளுநர்களாக நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.