Print this page

கிளிநொச்சி - கோண்டாவில் பகுதியில் குடும்பஸ்தர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை

November 09, 2022

கிளிநொச்சி, கோண்டாவில் பகுதியில் உள்ள நீர் கால்வாயில் கூரிய ஆயுதத்தால் வெட்டுக் காயங்களுடன் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கோண்டாவில் ஊற்றுப்புலம் ஏரியின் நீர் வயல்களுக்குள் செல்லும் கால்வாயில் சடலம் ஒன்று காணப்பட்ட விவசாயி ஒருவர் இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சடலத்தை பரிசோதித்த போது உடலில் பல வெட்டுக்காயங்கள் காணப்பட்டது.

ஒரு கும்பல் அல்லது நபரால் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தாக்குதலை நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கோண்டாவில் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான பி. சத்தியராஜ் என்ற நபரே கொலை செய்யப்பட்டவர் என அடையாளம் கண்டுள்ளதாகவும்,  மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.