Print this page

எரிபொருள் விலை திடீரென அதிகரிப்பு

November 11, 2022

இன்று (11) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவினாலும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 25 ரூபாவினாலும் அதிகரிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. 

இதன்படி, டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 430 ரூபாவாகும். 

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 365 ரூபாவாகும்.