Print this page

டலஸ் அணிக்குள்ளும் பிளவு

November 13, 2022

டலஸ் அழகப்பெரும தலைமையிலான தேசிய சுதந்திர சபையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரும் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என்ற விடயத்தில் இந்த பிரச்சினை எழுந்துள்ளது.

எதிர்வரும் தேர்தலில் சமகி ஜன பலவேகவுடன் டலஸ் அணி கூட்டணி அமைக்க வேண்டும் என ஒரு எம்பிக்கள் குழு தெரிவித்துள்ளது.

இந்த குழுவிற்கு கலாநிதி நாலக கொடஹேவா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆதரவளித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

டலஸ் அணி விமல் மற்றும் உதய அணியினரின் உத்தர லங்கா கூட்டமைப்புடன் கூட்டணி அமைக்க வேண்டுமென பேராசிரியர் சன்ன ஜயசுமண உள்ளிட்ட  உறுப்பினர்கள் குழு குறிப்பிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து இறுதி முடிவு எடுப்பதில் டலஸ் அணி தாமதம் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Last modified on Sunday, 13 November 2022 02:49