Print this page

தொழிலாளர்களுக்கு சம்பளத்திற்கு பதிலாக ஹெரோயின் வழங்கிய முதலாலி

November 14, 2022

ஊழியர்களுக்கு சம்பளத்திற்கு பதிலாக ஹெரோயின் பொதிகளை வழங்கிய வர்த்தகர் ஒருவரை நவகமுவ பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட வர்த்தகர் நவகமுவ பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர்.

 தொழிலதிபரின் கீழ் ஆறு பேர் வேலை செய்து வந்தனர்.

அந்த தொழிலாளர்கள் போதைக்கு அடிமையானதால், அவர்களுக்கு காலை, மதியம், மாலை என ஒரு பாக்கெட் போதைப்பொருள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொழிலதிபரிடம் பொலீசார் விசாரணை நடத்தியபோது, ​​பணம் கொடுத்தால் மறுநாள் வேலைக்கு வரமாட்டார்கள் என்பதால் ஹெராயின் பாக்கெட்டுகளை கொடுத்ததாக கூறினார்.