Print this page

மீண்டும் பால்மா தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு!

November 16, 2022

மீண்டும் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பால் மா இறக்குமதி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டொக்டர் லக்ஷ்மன் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் அனுமதி கிடைக்காமையால் 4 இலட்சம் கிலோகிராம் பால் மா அடங்கிய 17 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் 25 நாட்களாக தேங்கிக் கிடப்பதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த 17 பால் மா கொள்கலன்களுக்காக 40 இலட்சம் தாமதக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளதாகவும் இதன் காரணமாக பால் மாவின் விலையை அதிகரிக்க நேரிடலாம் எனவும் விஜேசூரிய தெரிவித்தார்.

கப்பலில் பால் ஏற்றப்படும் போது ஒரு சட்டமும், நடுக்கடலில் திரும்பும் போது மற்றுமொரு சட்டமும், கப்பல் கொழும்பு துறைமுகத்தை நெருங்கியதும் மற்றுமொரு சட்டமும் அமுல்படுத்தப்படுவதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பால் மாவை விநியோகித்த நிறுவனங்கள் வியட்நாம் மற்றும் இந்தோனேஷியாவிற்கு கொண்டு வரப்பட்ட பால் மாவை மீண்டும் ஏற்றுமதி செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொள்கலன்களை விடுவிப்பதற்கு கைத்தொழில் அமைச்சின் அங்கீகாரம் இருந்த போதிலும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் பால் மா கொள்கலன்களை சிறையில் வைத்திருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர்  உபுல்மலி பிரேமதிலக்க, தமது திணைக்களத்தில் வினைத்திறனற்ற சூழ்நிலை இல்லை எனவும், கட்டுப்பாட்டாளர் என்ற வகையில் தாம் எவ்வித ஆவணங்களையும் மறைக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

பால் மா பிரச்சினை என்னவென்று தனக்கு சரியாகத் தெரியாது எனவும், பொதுச் சட்டத்திற்கு எதிராக ஏதேனும் இறக்குமதி செய்யப்பட்டால், அது எக்காரணம் கொண்டும் வெளியிடப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.