Print this page

கௌரவ கலாநிதி பட்டம் பெற்றார் மெராயா லிப்பக்கலை தோட்ட இளைஞர் ரஞ்சித்குமார்!

November 17, 2022

லிந்துலை - மெராயா லிப்பக்கலை பிரதேசத்தை சேர்ந்த இளைஞரும் வளர்ந்து வரும் தொழிலதிபருமான யோகராஜ் ரஞ்சித்குமார் என்பவருக்கு உலக சமாதான பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி உள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் குறுகிய காலத்திற்குள் பல இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து பல குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு இவர் பெரிதும் உதவி புரிந்துள்ளார்.

அத்துடன் வியாபாரத் துறையில் ஆர்வம் கொண்டு சிறு வயதிலேயே ஒரு நிறுவனத்தின் பொறுப்பாளராக வளர்ந்துள்ள யோகராஜ் ரஞ்சித்குமார் தனது துறையில் மென்மேலும் வளர வேண்டும் என ஊக்குவிக்கும் நோக்கத்தில் உலக சமாதான பல்கலைக்கழகத்தின் ஊடாக கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பேராசிரியர் நவரத்தினம் அவர்களால் இந்த கௌரவ கலாநிதி பட்டம் கொழும்பில் வழங்கி வைக்கப்பட்டது. 

Last modified on Thursday, 17 November 2022 05:11