Print this page

டயானா கமகேவை கைது செய்து நாடு கடத்துமாறு பாராளுமன்றத்தில் கோரிக்கை

November 17, 2022

வெளிநாட்டு பிரஜையான பாராளுமன்ற உறுப்பினரை உடனடியாக நாட்டிலிருந்து நாடு கடத்துமாறு சமகி ஜன ஜனபலவேகவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (17) கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை பிரஜை அல்லாத குறித்த எம்.பி.யை உடனடியாக குடிவரவு திணைக்களத்தின் மிரிஹானே தடுப்பு மையத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து நாடு கடத்த வேண்டும் என ரகுமான் தெரிவித்தார்.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர் வெளிநாட்டு பிரஜையாக இருந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்து வருவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு அளுத்கடை நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளது.

அவர் 2014 ஆம் ஆண்டு பெற்ற வதிவிட விசா மற்றும் அந்த வீசா 2015 ஆம் ஆண்டு ஏழாவது மாதத்தில் காலாவதியானது. இவ்விடயம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை அரசாங்கம் தெளிவாக மறைத்துள்ளதுடன், இவ்விடயத்தை ஆராய்ந்த இரண்டு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.