Print this page

'மன்னா கண்ணா' மீது துப்பாக்கிச் சூடு

November 19, 2022

பாதாள உலகக் குழு உறுப்பினர் என்று கூறப்படும் "மன்னா கண்ணா" என்ற நபர் மீது இனந்தெரியாத நபரால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இது கிராண்ட்பாஸ் – நவகம்புர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் கை மற்றும் தலையில் சுடப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.