Print this page

சர்வகட்சி அரசாங்கம் அமைக்க திரைமறைவில் பேச்சு

November 20, 2022

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் விசேட கூட்டமொன்று அண்மையில் இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரன் தவிர்ந்த ஏனைய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

“சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாட வேண்டும்” என ஏனைய கட்சி தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதற்காக ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சமகி ஜன பலவேகவின் உறுப்பினர்கள் குழுவொன்று அரசாங்கத்தில் இணைவதற்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவர்களில் ராஜித சேனாரத்ன எம்.பி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட தினத்தன்று அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்ட போதிலும் அவர் சமகி ஜன பலவேக அலுவலகத்தில் இருந்துள்ளார்.

எவ்வாறாயினும், சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவிகள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அவர்களில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் முக்கியமானவர்கள்.

எமக்கு அமைச்சர் பதவியை வழங்காமல் சமாதிக்கு ஜனாதிபதி எவ்வாறு அமைச்சர் பதவியை வழங்க முடியும் என கூறுகின்றனர்.

Last modified on Sunday, 20 November 2022 12:39