Print this page

ரணில் - பசில் சந்திப்பு, விரைவில் பல மாற்றங்கள் நிகழும்

November 21, 2022

உத்தேச அமைச்சரவை நியமனங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மொட்டு கட்சி தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் தனிப்பட்ட விடுமுறைக்காக அமெரிக்கா சென்றிருந்த திரு.பசில் ராஜபக்ச நேற்று (20) இலங்கை திரும்பினார்.

அவர் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருவதற்கு முன்னதாக திட்டமிட்டிருந்தார்.

ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்திற்கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்சியை ஒழுங்குபடுத்துவதற்காக அவர் திடீரென நாட்டுக்கு வந்துள்ளதாக மொட்டு கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அவரது வருகையின் பின்னர் இதுவரை காலதாமதமாகி வந்த அமைச்சரவை நியமனங்களும், ஆளுநர் நியமனங்களும் இடம்பெறவுள்ளதாக அறியமுடிகின்றது.