Print this page

மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்படுமா?

November 26, 2022

மின் கட்டண அதிகரிப்பு தவிர்க்க முடியாதது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

"யார் ஆட்சிக்கு வந்தாலும் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் செயற்பட முடியாது
யார் ஜனாதிபதியாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும், யார் ஆட்சியை நடத்தினாலும்,
மீண்டும் மின் கட்டண உயர்வை தவிர்க்க முடியாது" என வெள்ளிக்கிழமை (25) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் தெரிவித்தார்.


இலங்கை 2022 இல் பெற்ற மழையை 2023 இல் பெறும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

24 மணி நேரமும் மின்சாரம் வழங்க ஒரு யூனிட்க்கு ரூ. 56.90 எங்களுக்கு தேவைப்படுகிறது , இருப்பினும் நாங்கள் இன்னும் ஒரு யூனிட்க்கு 29 ரூபாய்க்கு தான் கொடுக்றோம் இது எங்களுக்கு பாரிய நஷ்டம். எரிபொருள், நிலக்கரி மற்றும் உலை எண்ணெய் தேவை, அவற்றை யாரும் இலவசமாக வழங்குவதில்லை" என்று அவர் மேலும் கூறினார்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின் கட்டணம் 75% உயர்த்தப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.