Print this page

மனைவியின் சந்தேகத்தை போக்கவென ஆணுறுப்பை அறுத்துக் கொடுத்த கணவன்!

November 27, 2022

மனைவியின் வீண் சந்தேகத்தால் கணவனுடன் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக கணவன் தனது ஆணுறுப்பை கூரிய ஆயுதத்தால் அறுத்துக்கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளது.

பொல்பித்திகம பொலிஸ் பிரிவைச் சேர்ந்த இந்த திருமணமானவர், கடந்த 26ஆம் திகதி மாலை வெளியே சென்றபோது, ​​தனது மனைவி வழிதவறிச் சென்றதாகக் குற்றம் சுமத்தியபோது, ​​வீண் பழி சுமத்த வேண்டாம் என்று கேட்டுள்ளார்.

மனைவியின் சந்தேகத்தை போக்கவென கணவன் தனது ஆணுறுப்பை வெட்டி காட்டியுள்ளார்.

எனினும் ஆணுறுப்பு பிரிக்கப்படாததால் வெட்டுக்காயங்களுடன் பொல்பிதிமகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.