Print this page

அரசு ஊழியர்களின் ஆடைக் கட்டுப்பாடு குறித்த இரண்டு சுற்றறிக்கைகள் ரத்து

November 30, 2022

2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் அரச துறையின் ஊழியர் தர அதிகாரிகளின் உத்தியோகபூர்வ உடை தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

புதிய சுற்றறிக்கையை வெளியிட்ட அமைச்சு, இதற்கு முன்னர் ஜூன் 2019 மற்றும் செப்டம்பர் 2022 இல் வெளியிடப்பட்ட இரண்டு சுற்றறிக்கைகள் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இரண்டு சுற்றறிக்கைகளையும் மீளப்பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசு ஊழியர்கள் சாதாரண மற்றும் பொருத்தமான உடையில் பணிக்கு வருவதற்கு சுற்றறிக்கைகள் அனுமதித்துள்ளன