Print this page

பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு

December 02, 2022

இவ்வருடம் இரண்டாம் தவணை மற்றும் மூன்றாம் தவணைக்கான பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கும் விதத்தை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாடசாலை தவணை நேற்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மூன்றாவது தவணை வரும் 5ம் திகதி துவங்கி மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும்.

அதன்படி, முதற்கட்டமாக பாடசாலை வரும் 5ம் திகதி முதல் 22ம் திகதி வரை நடக்கிறது.

அடுத்த ஆண்டு (2023) 23ஆம் திகதி முதல் ஜனவரி 1ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இரண்டாம் கட்டமாக ஜனவரி 2ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மீண்டும் பாடசாலைகள் நடத்தப்படும்.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை காரணமாக மூன்றாம் தவணைக்காக ஜனவரி 21ஆம் திகதி மூடப்படும் பாடசாலைகள் பெப்ரவரி 19ஆம் திகதி வரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மூன்றாம் கட்டத்தின் கீழ், பிப்ரவரி 20 அன்று பாடசாலைகள் மீண்டும் தொடங்கும்.