Print this page

தக்காளி சாரின் சிறப்பு

December 17, 2021

நன்கு கனிந்த தக்காளி,
1/2 கப் தயிர்,
இரண்டையும் ஒன்றாக அரைத்து, முகம், கை, காலில் தினமும் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர, சூரிய ஒளியின் ஏற்பட்ட கருமை மறையும்.

3 டீஸ்பூன் தக்காளிச்சாறு,
1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு,
2 டீஸ்பூன் மில்க் க்ரீம் கலந்து,
முகம் மற்றும் கழுத்தில் மாஸ்க் போட்டால், முகம் பளிச்சிடும். வாரம் இருமுறை இதுபோன்ற செய்து வர வேண்டும்.

2 டீஸ்பூன் தக்காளிச்சாறு,
1 டீஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் பூச வேண்டும்.
20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முகம் பிரகாசிக்கும்.

1 டேபிள்ஸ்பூன் தக்காளிச்சாறுடன்
1 டேபிள்ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி,
10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர, சருமத்தின் நிறம் மாறுவதை கண்கூடாக பார்க்கலாம்.

- M.அக்ஷயா -