Print this page

நடிகர் "தீப்பெட்டி" கணேசன் மரணமடைந்தார்

தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று ரேணிகுண்டா,  உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் கார்த்திக் என்கின்ற தீப்பெட்டி கணேசன்.

இவர் அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த தீப்பெட்டி கணேசன் சுமார் 10 ஆண்டுகளுக்கு மன்னர் ரேணிகுண்டா படத்தில் அறிமுகமாகி தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, கோலமாவு கோகிலா, கண்ணே கலைமானே போன்ற படங்களில் நடடித்து பிரபலமாகிக்கொண்டிருந்தார்.

இன்னும் பல வெளிவரா படங்களில் நடித்துள்ளார். 05 ஆண்டுகளுக்கு முன் திருமனம் செய்துகொண்ட அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று காலை வைத்தியசாலையிலிருந்து வீட்டிற்கு செல்ல தயாரான நிலையில் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

Last modified on Monday, 22 March 2021 16:00