Print this page

இடைநிறுத்தப்பட்ட பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு!

September 15, 2021

நாயகன்,மும்பை,உயிரே,அலைபாயுதே,ராவணன் போன்ற என்றும் அழியாத அருமையான படங்களின் சொந்தக்காரர் பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் அவர்கள் கடந்த சில மாதங்களாக  மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா தயாரிப்பகம் போன்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இயக்கி தயாரிக்கும்  பிரபல தமிழ் எழுத்தாளரான கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்ட 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மத்தியபிரதேச மாநிலம் மற்றும் ஊட்டியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரைப்படத்தில் விக்ரம்,கார்த்திக்,ஜெயம் ரவி,அமிதாப் பச்சன்,ஜெயராம்,ஐஸ்வர்யா ராய்,திரிசா,விக்ரம் பிரபு,ஐஸ்வர்யா லெக்ச்சுமி,சோபிதா துலிபாலா,பிரகாஷ் ராஜ்,அஸ்வின் ககுமனு,நிழல்கள் ரவி,ரியாஸ் கான் போன்ற பல பிரபல நட்சத்திர பட்டாலமே நடிக்க பிரபல இசையமைப்பாளரான ஆஸ்கார் நாயகன் ஏ. ஆர். ரகுமான் இசைமைத்துள்ளார்.

இதனை அடுத்து இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில் பொள்ளாச்சிக்கு படப்பிடிப்புக்கு கிளம்பிய மணிரத்னம் திடீரென தனது பயணத்தை ரத்து செய்துள்ளதாகவும் ஏற்கனவே பொள்ளாச்சி சென்ற தனது படப்பிடிப்புக் குழுவினரை திரும்பிவர அவர் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பொள்ளாச்சியில் ஒரு பாடல் காட்சியை படமாக்க மணிரத்னம் திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் அந்த பாடல் காட்சி இல்லாமலேயே படத்தை வெளியிட தீர்மானித்து இந்த படப்பிடிப்பை ரத்து செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அழகு, வியப்பு, பிரம்மிப்பு... இதுவே பொன்னியின் செல்வன்'- சுவாரஸ்யம்  சொல்லும் படக்குழு | Upcoming movie Ponniyin Selvan intresting details |  Puthiyathalaimurai - Tamil News | Latest ...

Last modified on Wednesday, 15 September 2021 06:49