web log free
May 20, 2024

அமெரிக்காவில் வீசிய சூறாவளியில் 100 பேர் பலியாகியிருக்கலாம்.

அமெரிக்காவில் சுழன்றடித்த சூறாவளியில் சிக்கி சுமார் 100 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சூறாவளி பாதிப்பால் கென்டகி மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்த அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.
 
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு மாகாணங்களில் கடுமையான சூறாவளி புயல் தாக்கியது. இதனால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில், ஆயிரக்கணக்கான வீடுகளின் கூறைகள் பறந்துவிட்டன. சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகளால் சுமார் 100 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சுவதாக கென்டக்கி மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். அர்கன்சாஸில் மருத்துவனை கூரை இடிந்து உள்ளே இருந்த ஒரு நோயாளி இறந்துள்ளார். மேலும் 20 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். இல்லினாய்ஸில் அமேசான் நிறுவனத்தின் கிடங்கு இடிந்து அதற்குள் 40 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Last modified on Sunday, 12 December 2021 05:59