web log free
May 20, 2024

விவாகரத்து தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

சமீபகாலமாக திருமணம் செய்து கொள்ளும் நபர்களிடையே விவாகரத்துகள் அதிகரித்து வருவதாக திருமண பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகமாகக் காணப்படும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மாவட்ட நீதிமன்றங்கள் வழங்கும் விவாகரத்து வழக்குத் தீர்ப்புகளைக் கருத்தில் கொண்டு, சமீபத்தில் திருமணம் செய்துகொள்பவர்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் விவாகரத்து செய்யும் ஒரு போக்கு காணப்படுகிறது.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுகள் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் சட்டத்தரணி திரு லக்ஷிகா கணேபொல இதனைத் தெரிவித்துள்ளார்.