web log free
May 20, 2024

லசந்தவின் கொலையாளியை ஐ.தே.கவுக்கு கண்டுப்பிடிக்கமுடியவில்லை

 

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க, படுகொலைச் செய்யப்பட்டு 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அந்தக் கொலைக்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன்பாக நிறுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது என மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி தெரிவித்தார்.


அதேபோல இது தொடர்பிலான விசாரணைகளுக்குப் பொறுப்பானவர்கள், உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தன்னுடைய டுவிட்டர் கணக்கின் ஊடாக அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Last modified on Sunday, 06 January 2019 22:31