web log free
May 20, 2024

மகளைக் கொன்ற தாயும், கள்ளக்காதலனும் கைது


தன்னுடைய ஒன்பது வயதான மகளை கொன்று, வீட்டுத் தோட்டத்தில் புதைத்த அந்த பிள்ளையின் தாயும், அத்தாயின் கள்ளக்காதலனும் ஞாயிற்றுக்கிழமை (6) கைது செய்யப்பட்டுள்ளனர் என ஹாலிஹெல பொலிஸார் தெரிவித்தனர்.


கந்தேகெதர, மஹதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான பெண்ணும், அவருடைய கள்ளக் காதலனான 31 வயதான ஆணுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.


வவுனியா, செட்டிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி பெண், தன்னுடைய கணவனை கைவிட்டுவிட்டு, தன்னுடைய மகளுடன் கந்தேகெதரையில் உள்ள கள்ளக்காதலன் வீட்டில் வசித்துவந்துள்ளார்.


இந்நிலையில், 9 வயதான மகளை, 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் படுகொலைச் செய்து, வீட்டுத்தோட்டத்தில் புதைத்துள்ளனர் என, பதுளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


சடலம், இன்று (7) தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.