web log free
May 05, 2024

சமந்தா – ரஷ்மிகா! பரவும் புதிய தகவல்

மந்தா மற்றும் ரஷ்மிகா இருவரும் சகோதரிகளாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளனர் என தகவல் பரவி வருகிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயின்களாக இருப்பவர்கள் நடிகை ரஷ்மிகா மந்தனா மற்றும் சமந்தா. அவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளார்கள் என தற்போது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகிறது. Multi-starrer படங்கள் பொதுவாகவே தெலுங்கில் அதிகம் உருவாக்கப்பட்டு வருகின்றன. பல படங்களில் ஹீரோக்கள் தான் இணைந்து நடிப்பார்கள்.

இந்நிலையில் அதே போல சமந்தா மற்றும் ராஷ்மிகா இருவரும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்கள் என கூறப்படுகிறது.

அந்த படத்தில் சமந்தாவின் தங்கையாக ராஷ்மிகா நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. பெண்களை மையப்படுத்தி தான் இந்த படத்தின் கதை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.

சமந்தா மற்றும் ராஷ்மிகா இருவருக்கும் தெலுங்கு மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் இந்த படம் தெலுங்கில் உருவானாலும் தமிழில் டப் ஆகி வெளியாக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

சமந்தா அடுத்து தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங்கும் கடந்த பல மாதங்களுக்கு முன்பே துவங்கியிருக்க வேண்டும், ஆனால் கொரோனா காரணமாக இன்னும் துவங்காமல் இருக்கிறது. அரசு அனுமதி கிடைத்தவுடன் அது துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ரஷ்மிகாவும் கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார். தமிழில் அவர் கார்த்தி ஜோடியாக சுல்தான் என்ற படத்தில் நடிக்க உள்ளார். மேலும் தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா என்ற படத்தில் அவர் நடிக்க உள்ளார். மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடத்திலும் வெளிவர உள்ளது. ஆந்திரா காட்டு பகுதிகளில் நடக்கும் செம்மர கடத்தல் சம்பவங்களை மையப்படுத்தி தான் இதன் கதை இருக்கும்.

இப்படி கைவசம் பல்வேறு படங்கள் வைத்திருக்கும் சமந்தா மற்றும் ரஷ்மிகா இருவரும் இணைந்து நடிப்பதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்கள் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் மிக குறுகிய காலத்தில் ரசிகர்களை அதிகம் ஈர்த்தவர் ரஷ்மிகா. அவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலமாக தான் நடிகையாக அறிமுகம் ஆனார். அதற்கு பிறகு தெலுங்கில் அவர் நடித்த கீதா கோவிந்தம் படம் அவரை மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆக்கியது. தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் அவருக்கு அதிகம் ரசிகர்கள் கிடைத்துவிட்டார்கள்.

ரஷ்மிகா சமீபத்தில் தனது அழகை எப்படி பராமரிக்கிறேன் என்பது பற்றி பேசி இருந்தார். “நான் வளரும்போது தோல் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன். எனக்கு இருப்பது காம்பினேஷன் ஸ்கின், அதனால் நான் கூறுவது அனைத்தும் என்னுடைய சொந்த அனுபவத்தில் மட்டுமே சொல்கிறேன். சிறப்பான விஷயம் என்ன என்பதை மருத்துவர் தான் கூற முடியும்.” இவ்வாறு குறிப்பிட்டு ராஷ்மிகா மொத்தம் ஒரு 7 அறிவுரைகளை அனைவருக்கும் வழங்கி இருந்தார்.

Last modified on Friday, 14 August 2020 00:56