web log free
May 02, 2024

ஊ சொல்றியா மாமா.. பாடலை தொடர்ந்து மீண்டுமொரு ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடும் சமந்தா..!

 

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் புஷ்பா தி ரைஸ். சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் ரிலீஸ் ஆனது.

இந்தப் படத்தில் அல்லு அர்ஜூனின் நடிப்பை ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் பார்த்து பார்த்து பாராட்டி வருகின்றனர். படம் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்தை கடந்த போதும் படத்திற்கான வரவேற்பு இன்னமும் குறையவில்லை.

புஷ்பா படத்தில் நடிகை சமந்தா ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். அந்த பாடல் சில சர்ச்சைகளில் சிக்கியப்போதும் செம ஹிட்டாகியுள்ளது. யூட்யூப்பில் 100 மில்லியன் வியூஸ்களை குவித்த அந்த பாடலை தற்போதும் ரசித்து வருகின்றனர். இதனால் ஊ சொல்றியா பாடலின் வியூஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தப் பாடலில் சமந்தாவின் நடனமும் முக பாவனைகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததும் இந்த பாடலின் வெற்றிக்கு காரணமாய் அமைந்தது. இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நடிகை சமந்தா, மேலும் ஒரு படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் பேன் இந்தியா படமாக உருவாகும் லிகர் படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐட்டம் பாடலுக்கு ஆட சமந்தாவை தொடர்பு கொண்ட போது அவர் ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மகாநடி படத்தில் சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.