web log free
May 01, 2024

நயன்தாரா வீட்டில் மீண்டும் வி​ஷேசம்! விருந்துக்குத் தயாராகும் பிரபலங்கள்!!

நடிகை நயன்தாரா ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் வெளிநாட்டிற்கு விக்னேஷ் சிவன் உடன் சென்று கொண்டாடி வரும் நிலையில் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட வெளிநாடு செல்லவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளன.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் வாடகை தாய் மூலம் இந்த தம்பதிகள் இரட்டை குழந்தைகள் பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் பிறந்தநாள் வெளிநாட்டில் கொண்டாடப்படும் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நயன்தாராவின் 38வது பிறந்த நாள் நவம்பர் 28ஆம் தேதி வர இருக்கும் நிலையில் இந்த ஆண்டு நயன்தாரா தனது பிறந்தநாளுக்கு எந்த வெளிநாடும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. திருமணமான பின்னரும் குழந்தை பெற்ற பின்னரும் வரும் முதல் பிறந்தநாள் என்றாலும் இந்த பிறந்த நாளை அவர் தனது குழந்தைகளுடன் வீட்டிலேயே கொண்டாட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பிறந்தநாள் தினத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து ஒரு விருந்து வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் அட்லீ இயக்கி வரும் ’ஜவான்’ படத்தில் நயன்தாரா நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் அவர் விரைவில் கலந்து கொள்ள உள்ளார். அதேபோல் அஜித் நடிக்கவிருக்கும் ’ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பை இன்னும் ஒரு சில வாரங்களில் விக்னேஷ் சிவன் தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.