சில தலைவர்கள் செய்வது போல, “என்னை கைது செய்ய வேண்டாம், எங்களை சிறையில் அடைக்க வேண்டாம்” என்று மண்டியிட்டு வேண்டிக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
“சிறையில் அடைப்போம் என்று சொன்னவுடன், சில தலைவர்கள் போல ‘ஐயா, என்னை மட்டும் கைது செய்ய வேண்டாம். எங்களை சிறையில் அடைக்க வேண்டாம்’ என்று நாங்கள் மண்டியிட்டு கேட்கப் போகிறோமா? இல்லை.
இத்தகைய சவால்களை வென்றே இந்த மேடையை நாம் உருவாக்கியுள்ளோம். எதிர்காலத்தில் இந்த நாட்டில் அனைவருக்கும் சமமாக சட்டம் நடைமுறைக்கு வரும், நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சி நிலவும் ஒரு சுதந்திரமான நாட்டை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.”
குருநாகலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்தார்.




