web log free
April 30, 2024

 

வாழை இலைகளில் சாப்பிடுவதும், பெரும்பாலான விருந்துகளில் வாழை இலையில் உணவு பரிமாறப்படுவதையும் பார்த்து இருப்போம். அதே போன்ற தையல் இலைகளை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

தற்போதைய நெகிழி போன்ற என்னற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்ட விதவிதமான தட்டுகளுக்குப் பதிலாக, முன்பெல்லாம் தைக்கப்பட்ட இலையில் (தையல் இலை) தான் உணவுகளை இட்டு உண்ணவும், பொட்டலங்கள் கட்டவும் பயன்படுத்தப்படும்.

ஆல இலை, மந்தாரை இலை, முருக்கை இலை போன்ற இலைகளை மடிப்புகள் இல்லாமல் பக்குவம் செய்து முற்றிலும் உலர்ந்தபின் மெல்லிய ஈர்க்கால் வட்ட வடிவமாகத் தைத்து உபயோகித்து வந்தோம்.

இந்த இலைகள் திருவிழாக்கள் மற்றும் கோயில்களில் பாரம்பரியமாக வழங்கப்படும் உணவினை வழங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இது இந்தியாவில் ஒரு குடிசைத் தொழிலாக வீட்டிலிருந்தே செய்யக்கூடிய வேலையாகும்.

தற்போது தமிழகத்தில் உள்ள நெகிழி தடையால் பெரும்பாலான வீடுகளில் இந்த தையல் இலைகளை கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.

வாழை இலை போன்றவற்றை ஓரிரு நாட்கள் மட்டுமே வைத்து உபயோகிக்க கூடிய நிலையில், இந்த தையல் இலைகளை நீண்டகாலம் சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.

கடைகளில் சட்டினி, பஜ்ஜி, போண்டா, ஊறுகாய் விற்பனைக்கு வந்தபோது அதை சிறு சிறு பொட்டலங்களாக மந்தாரை இலைகளேயே உபயோகித்தனர்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத தையல் இலைகளை சாப்பிட்டு தூக்கி எறிந்தால் கால்நடைகளுக்கு உணவாகவும். இல்லையெனில், சில நாட்களில் மண்ணோடு மக்கி காணாமல் போகும். நெகிழி பல ஆண்டுகள் ஆகியும் மக்காமல் அப்படியே கிடக்கும்.

இன்றைய இணையவழி மூலம் உணவு வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் இதை பின்பற்ற செய்யவேண்டும்.

எனவே இத்தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு தையல் இலைகளை பயன்படுத்துவதன் மூலம் குடிசைத்தொழிலை ஆதரித்து, நெகிழி பயன்பாட்டை தவிர்த்து இயற்கையை ஒத்து, நம் மண்ணின் வளத்தையும் காக்கலாம். தற்சார்பாக நமது வாழ்க்கையை நடத்திட பெரும்பங்காற்றும். 

இன்று பரவலாக பேசிவரும் பிரஜைகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று G20 சர்வமத மாநாடு! பலருக்கு தெரியாத சிலருக்கு தெரிந்த G20 மாநாட்டின் முக்கியத்துவம் தெளிவாக பாமரர் புரியும் வண்ணம் நோக்கினோமானால்,

1999 வரை G8 நாடுகளாக இருந்த அமைப்பு 1997ல் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியால் G20 நாடுகளாக மாற்றமடைந்தது.

G8 என்பதை "Group of eight" என பொருள் கொள்ளலாம். பிரான்சு, அமெரிக்கா, ஜப்பான், கனடா, இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளே G08 நாடுகள் சபையில் அங்கம் வகிக்கித்தது. பின் 1999 ல் செப்டம்பர் மாதம் 26ம் திகதி G20 நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்டது.

G20 நாடுகள் சபையில் G08 நாடுகள் உட்பட பணபலம்,ஆட்பலம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் 12 நாடுகளும் இணைந்து கொண்டது.

G20 நாடுகளாக அர்ஜென்டினா, அமெரிக்கா, கொரியகுடியரசு, அவுஸ்திரேலியா, பிரேசில், சீனா, இந்தியா, இந்தோனேசியா, கனடா, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இடம் பிடித்துள்ளது.

உலகின் முக்கிய பொருளாதாரம் அபிவிருத்தி மற்றும் போர் யுக்திகள் தொடர்பில் ஒன்றினைந்து கலந்துரையாடி சீரமைக்கும் சர்வதேச மன்றமே G20 அமைப்பு.

இது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவீதமும் உளகளாவிய வர்த்தகத்தில் 75 சதவீதமும் உலக மக்கள் தொகையில் 60 சதவீதமும் பங்களிப்பு வழங்கும் 20 நாடுகளே G20 நாடுகள் அமைப்பு கொண்டுள்ளது.

இவ்வமைப்பிற்கு நிரந்தர செயலகம் என்று ஓர் இடத்தை குறிப்பிட முடியாது. இவ்வமைப்பின் தலைமைப் பொறுப்பு சுழலும் நாற்காலி போல் வருடாவருடம் மாறுப்படும். தலைமைப் பொறுப்பை யார் முன் வந்து ஏற்கிறாரோ அவரே அடுத்த ஆண்டு வைபவத்தை கூட்ட வேண்டும்.

தலைமைப் பொறுப்பில் இருக்கும் நாடு ஏனைய G20 அல்லத நாடுகளையும் கூட்டத்திற்கு விருந்தினராக அழைக்கலாம். வருடாவருடம் அழைப்பின் பேரில் பல நாடுகளின் தலைவர்கள் அல்லது துணை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துக் கொள்வது வழக்கம்.

சாதாரண கூட்டமாக நடந்தேறிய நிகழ்வு 2008 முதல் உச்சி மாநாடாக மாற்றம் செய்யப்பட்டது.

இக்கூட்டணியில் குழு மற்றும் தனிப்பட்ட போச்சு வார்த்தைகளும் நடைபெறும். இங்கு உலகின் முக்கிய பொருளாதார முடிவுகள் எடுக்கப்படும்.
இவ்வமைப்பின் முக்கிய முடிவுகளுள் குறிப்பிடத்தக்க முடிவாக 2008ல் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 2009ல் G20 மாநாட்டில் 5 லட்சம் கோடி டாலர் தொகையை உலக பொருளாதாரத்தில் புலக்கத்தில் விடப்பட்டது. இந்த முடிவால் அக்காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சீராக்க முயன்றது.

2019 ஜப்பானில் ஒசாகாவில் நடை பெற்ற G20 மாநாட்டில் பொண்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அன்று முதல் G20 மாநாட்டில் கருப் பொருளுள் பொண்ணியம் என்பதும் சேர்க்கப்பட்டது.

2020 சவூதி அரேபியாவில் நடைபெற இருந்த மாநாடு கொரோனா காரணமாக இணையம் வழியாக நடைப்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2021 இத்தாலியில் ரோம் நகரில் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் முன்கூட்டிய கூட்டம் இத்தாலியின் பொலஞா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றவண்ணம் உள்ளது. இதில் இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் விருந்தினராக கலந்து கொண்டுள்ளது.

நோர்டிக் நாடுகள் உட்பட பாகிஸ்தான் போன்ற சில நாடுகள் இதுவரையில் G20 மாநாட்டில் கலந்து கொண்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் G20 நாடுகளிடம் 25.4 பில்லியன் தொகை கடன்பட்டிருப்பதே இம்மாநாட்டில் கலந்துக்கொள்ளாததற்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது.

2021 உச்சி மாநாட்டிற்கு அல்கேரியா, நியுசிலாந்து, புருனை, காங்கோ ஜனநாயகக் குடியரசு, ருவாண்டா, சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் G20 சர்வமத மாநாட்டின் முன்னாயத்த வைபவத்தில் கலந்து கொண்ட இலங்கையின் பிரதமர் கௌரவ புத்தசாசன மற்றும் சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் மதிப்பிற்குரிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் " ஒரு தேசத்தின் ஒற்றுமையிலே எதிர் காலம் தங்கியுள்ளது" என தனது பிரதான உரையை ஆரம்பித்தார்.

அவரது உரையிலே " கலாச்சாரங்களுக்கிடையே சமாதானம் மதங்களுக்கிடையே புரிதல் " என்ற கருப்பொருளை மையமாக வைத்து உரையாற்றினார்.
" என்னை இந்த வரலாற்று சிறப்புமிக்க இத்தாலியின் பொலஞா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் G20 சர்வமத மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த இத்தாலியின் ஏற்பாட்டுக் குழு தலைவர் பேராசிரியர் அல்படோ மெலொனி உள்ளிட்ட குழுவிற்கு நன்றி கூறுகிறேன்" என்ற கூற்று முதன்மைப்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.

தெற்காசியவின் புவியியல் வலையமான இலங்கை இம்மாநாட்டின் தொனிப்பொருளுள் அமைந்திருப்பது எமக்கு பெருமையான ஒன்றாகும்.  இன மத ஒற்றுமை எமது நாட்டின் முக்கிய அம்சமாகும். தீவிரவாத சித்தாந்தங்கள் மற்றும் அதனுடைய வன்முறை சம்பவங்கள் என்பன நமது யுகத்தின் சவால். முழு உலகும் தற்போது எதிர் நோக்கியுள்ள கடுமையான சுகாதார நெருக்கடி நம் அனைவரையும் ஒன்றிணைப்பதற்கு உதவியுள்ளது. கொரோனா தொற்றானது பல்வேறு மதங்கள் இனங்கள் மற்றும் நாகரிகங்கள் வேறுபாடு இன்றி முழு உலகையும் கலங்கச் செய்துள்ளது. கடந்த கால நடந்து முடிந்த விடையங்களை பற்றி பேசாமல் இனி உலகை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை பற்றி கலந்துரையாட வேண்டும் என பிரதமர் கௌரவ ராஜபக்ஷ அவர்கள் தன் உரையில் கூறியிருந்தார்.

இந்திய அரசாங்கம் தடுப்பூசிகள் மரணத்தை கட்டுப்படுத்துகின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறது, மேலும் கொடிய இரண்டாவது கொரோனா அலை காரணமாக இறந்தவர்களில் பலருக்கு எந்த அளவு தடுப்பூசி டோஸ்ம் கிடைக்கவில்லை என்று கூறுகிறது.

தரவுகளை வெளிப்படுத்திய இந்தியாவின் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் தலைவர் வி.கே.பால், இந்த தடுப்பூசி வைரஸுக்கு எதிரான மிக முக்கியமான கவசம் என்று கூறினார்.

ஒரு முழு தடுப்பூசி அளவைப் பெற்றிருநதால், அது இறப்பு விகிதத்தை ஏற்படுத்தாது, அவர்கள் மீண்டும் பாதிக்கப்பட்டால், அவர்கள் மிகக் குறைந்த அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்திய அரசாங்க அறிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பையில் மக்கள் ஆண்டின் மிகப் பெரிய திருவிழாவுக்குத் தயாராகி வரும் நிலையில், தினசரி கொரோனா வைரஸ் ஒரு மாதத்திற்குள் இரண்டு மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை தொடங்கும் யானை தலை கொண்ட இந்து கடவுளான விநாயகரை கொண்டாடும் விநாயகர் சதுர்த்தியின் 11 நாள் திருவிழாவிற்கு மக்கள் தயாரானதால் சந்தைகள் மற்றும் தெருக்களில் கூட்டம் பரபரப்பாக காணப்படுகிறது.

 

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவலை பகுதியைச் சேர்ந்த சிவனேசன் கஸ்தூரி 19 வயது யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இருந்து தப்பி தமிழகம் சென்று இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த நபருடன் ஏற்பட்ட காதலால் கடந்த 2018 ஆம் ஆண்டு விமானம் மூலம் சென்னை சென்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

#இலங்கை #முல்லைத்தீவு #அகதி #இந்தியா #தனுஷ்கோடி