web log free
March 28, 2024

வாழ்க காதல் 

காதலிக்கும் யாருக்குத் தான் தன் காதல் தோல்வியில் போய் முடிய வேண்டுமென்ற ஆசை இருக்கும். அப்படி தோன்றினால் அது ஏதோ பிரச்சினைக்கு உரிய காதலாகவே இருக்க முடியும். அதில் முதல்முறை விரிசல் வரும்போது பிரிய வேண்டும் என்ற எண்ணமே இருவருக்கும் வராதுதான். ஏதோ ஒரு பிடிவாதம் மட்டுமே இடையில் இருக்கும். அந்த சமயத்தில் ஒருவர் ஈகோவை விட்டு இறங்கி வந்தாலே திரும்பவும் அந்த காதல் முளைக்கத் தொடங்கி விடும். அப்படி உடையும் நிலையில் இருக்கும் காதலை எப்படி மீண்டும் மலரச் செய்யலாம் என்பது பற்றி இந்த தொகுப்பில் விளக்கமாகப் பார்க்கலாம்.

நாம் உயிருக்கு உயிராக விரும்பிய காதலைப் பிரிவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதுவும் கல்லூரி நாட்களில் காதலைப் பிரிவது என்பது மிகவும் வலி தரக்கூடிய ஒரு விஷயம். கல்லூரி பருவங்களில் நாம் இளமையாக இருப்போம், காதல் பிரிவை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு மனம் பக்குவம் அடைந்து இருக்காது. அப்படிப்பட்ட சூழலில் காதல் பிரிவு என்பது பலருக்கும் மிகப்பெரிய ஏமாற்றமும் துக்கமும் தரும்.

ஆனால் காதல் பிரிவினால் நாம் கற்க வேண்டிய அல்லது கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம். கல்லூரி நாட்களில் அந்த இளமையான வயதில் காதல் பிரிவு பலரது வாழ்க்கையைத் திசை திருப்பியுள்ளது. ஒருசிலர் நல்ல வழியிலும் பலர் கெட்ட வழியிலும் வாழ்க்கை திசை திருப்பியுள்ளது. பலர் மன உளைச்சலும் மனக் குழப்பத்திலும் ஈடுபட்டுப் படிப்பையும் தொலைத்து உள்ளார்கள்.எனவே கல்லூரி நாட்களில் காதல் பிரிவு என்பது மிகவும் கடினமான ஒன்று. முதல் காதல் பிரிவு போல் மனமுதிர்ச்சி வந்த பிறகு வரும் காதல் பிரிவு அவ்வளவு கடினமானதாக இருக்காது. ஆனால் அந்த முதல் காதல் பிரிவைக் கடப்பது தான் கடினம்.

காதலித்து ஏமாந்தவர்கள் அல்லது காதலித்த காதலி, பிரிந்தவர்கள் பலரும், காதல் தோல்வியை முடிவு என்று கருதுகின்றனர். ஆனால் காதல் என்பது ஒரு முறை மட்டுமே வருவது என்பது கிடையாது. மருத்துவ ரீதியில் சொன்னால் அது ஒரு ஹார்மோன் சம்பந்தப்பட்ட உணர்வு.

எனவே முதல் காதல் தோல்வி அடைந்தால் அதோடு வாழ்க்கை முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை, ஒரு கதவு அடைத்தால் மறு கதவு திறக்கும் என்று நம்ப வேண்டும். காதல் தோல்வி அடைவது என்பது நம்மைக் காதலித்தவர்கள் உடனான உறவு முறிந்தது தவிரக் காதலுக்கும் நமக்கும் உள்ள உறவு முறிவதில்லை.

அது தொடர் கதையாக நம்மைத் தொடர்ந்து கொண்டே வரும்.பலர் காதல் தோல்வியை நினைத்து வாடி வாழ்க்கையைத் தொலைத்து வருகின்றனர், சில தேவையில்லாத முடிவுகளை எடுக்க நினைக்கின்றனர், ஒரு சில திரைப்படங்களைப் பார்த்து காதலியை நினைத்து அல்லது காதலனை நினைத்து வருந்தி வாழ்க்கை கிடக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு நாம் சில வழிமுறைகளைப் கூறவேண்டும். காதலைக் கடந்து போக வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணம். அதைச் சொல்வதைவிடச் செய்து காட்ட முயற்சி செய்ய வேண்டும்.

இது நம்புவதற்கு மிகவும் கடினமான காரியம் என்றாலும் இதுதான் உண்மை நம்மால் யாரையும் வற்புறுத்தி நம்மைக் காதலிக்க வைக்க முடியாது. ஒரு மேஜிக் செய்து அவர்களை நம்மைக் காதலிக்க வைக்க இங்கு நிஜ வாழ்க்கையில் எந்த மந்திர சக்தியும் கிடையாது. நாம் காதலித்து அவர்களின் அன்பைப் பெறப் பல வழிகளில் முயன்று பலர் ஏமார்ந்து இருப்பார்கள்.

ஒரு சிலரை மன மாற்றுவது மிகவும் கடினம் அல்லது வற்புறுத்திக் காதலிக்க வைப்பது மிகப்பெரும் தவறு. அப்படி வற்புறுத்தி காதல் செய்தாலும் அந்த காதல் நிலைத்து நிற்பது கஷ்டம். இனிமே எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு சிலரின் மனதை மாற்ற நம்மால் இயலாது அவர்களை விட்டு விலகி வர நாம் கற்றுக் கொள்ளவேண்டும். வாழ்க்கையின் முக்கியமான ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் நமது சந்தோஷம் என்றுமே அடுத்தவர்களிடம் இருக்கக்கூடாது. நமது சந்தோஷத்தை நமக்கு உள்ளாகவே தேடவேண்டும்.

காதலிக்கும் போது காதலையும் படிப்பையும் ஒருசேர ஒழுங்காகக் கொண்டு செல்வது மிகவும் கடினமான காரியம். காதலையும் படிப்பையும் திருப்திப்படுத்துவது என்பது நடக்காத காரியம். எனவே கல்லூரி நாட்களில் காதலைவிடப் படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. ஏனென்றால் காதல், கல்லூரி நாட்கள் முடிந்த பின்னரும் வரும். ஆனால் படிப்பு அப்படி கிடையாது படிக்கும் நாட்களிலேயே நாம் படிக்க முடியும். படிப்பைத் தொலைத்து விட்டால் வாழ்க்கை தொலைந்து விடும்.

நாளை நமது எதிர்காலம் படிப்பினால் வீணாய்ப் போனால், நமது காதல் கூட நம்முடன் இருப்பது கடினமான காரியம். எனவே வாழ்க்கையில் படிப்பும் எதிர்காலமும் மிகவும் முக்கியம். அதற்கு அடுத்தபடியாக காதலித்தால் காதலிலும் லயிக்கலாம். வாழ்க்கையிலும் ஜெயிக்கலாம். உங்கள் காதலர் போதுமான மன முதிர்ச்சியுடன் இருந்தால் கல்லூரி காலம் முடியும் வரை நம் காதலைச் சிறிது தள்ளிப் போடுவோம் என்று கூறி நன்றாகப் படித்து முடித்து கல்லூரி வாழ்க்கையை முடித்து விட்டு பின்னர் உங்கள் உறவைத் தொடரலாம்.

வாழ்க காதல்.

 

 

Last modified on Sunday, 05 December 2021 19:40