web log free
March 29, 2024

தேர்தலை ஏன் தாமதப்படுத்தக்கூடாது - மஹிந்த தேசப்பிரிய

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை தாமதப்படுத்துவது ஏற்புடையதல்ல எனவும், ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவாக உள்ளதாகவும் இலங்கை தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) முடிவடைவதால், கூடிய விரைவில் தேர்தலை நடத்துவது அவசியம் எனவும் ,எந்த சூழ்நிலையில் இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்துவது ஏற்புடையதல்ல ,
இந்த உள்ளுராட்சி மன்றங்களை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் நீண்டகாலம் நடத்துவது ஏற்புடையதல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆகக் குறைந்தது 3, 4 மாதங்களுக்குள் இந்தத் தேர்தல்கள் நடக்கும் என்று நம்புகிறேன். ஏப்ரல் 25 ஆம் தேதி தேர்தலை நடத்தினால் மிகவும் நல்லது. ஆனால் இப்போது அது கடினம் என்று தெரிகிறது. ஏனென்றால் தபால் ஓட்டுக் கூட தேவையானா பேலேட் பேப்பர்கள் எங்களிடம் இல்லை.அரசாங்க அச்சுத் திணைக்களத்திடம் இருந்து வாக்குச் சீட்டுகள் கிடைத்த பிறகுதான் தேர்தலை நடத்த முடியும் என இலங்கை தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

Last modified on Saturday, 25 March 2023 09:34