web log free
March 29, 2024

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இருவர் உயிரிழப்பு


விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள துலுக்கன்குறிச்சியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இன்று காலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பட்டாசு தயாரிப்பு அறை மிகவும் சேதமடைந்தது. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.