web log free
June 07, 2023

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 13 வயது பயணியிடம் விசாரணை

சிபுவிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட ஸ்கூட் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தேகத்தின் பேரில் 13 வயது பயணியிடம் பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

விமானத்தின் பாதுகாப்புக்காக F-15SG ரகப் போர் விமானங்கள் இரண்டு அனுப்பி வைக்கப்பட்டன.

மிரட்டல் போலியானது என்பது பின்னர் தெரிய வந்ததாகத் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தமது Facebook பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் ஆயுதப் படை ஒவ்வொரு பாதுகாப்பு மிரட்டலையும் உண்மையானதைப் போலவே கருதி அதிக அக்கறையுடன் கையாள்வதாக அவர் கூறியுள்ளார்.

Last modified on Monday, 03 June 2019 05:24