web log free
April 24, 2024

விமானத்தின் 2-வது கருப்பு பெட்டி மீட்பு

இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ந் திகதி தலைநகர் ஜகார்த்தாவில் புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஜாவா கடலில் வீழ்ந்து நொறுங்கியது.

இதில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களை தேடும் பணியும் நடந்தது. விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளில் ஒன்று ஏற்கனவே மீட்கப்பட்டது.

இந்த நிலையில் குரல் பதிவுக் கருவி அடங்கிய விமானத்தின் 2-வது கருப்பு பெட்டி கடலுக்கு அடியில் இருந்து நேற்று மீட்கப்பட்டது.