web log free
April 11, 2025

இந்தோனேசியாவில் 30 பேர் பலி

இந்தோனேசியாவில் அணைக்கட்டு நீர்ப் பெருக்கத்தால் குறைந்தது 30 பேர் பலியானதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வெள்ளத்திலிருந்து தப்ப முயன்ற குடியிருப்பாளர்களுக்குத் தற்காலிகப் முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளத்தில் மூழ்கியவர்களில் இதுவரை 30 பேரை மீட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர்.

வெள்ளத்தால் முக்கிய நெடுஞ்சாலை ஒன்றும் மூடப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

17,000க்கும் அதிகமான தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் வெள்ளப் பெருக்கும் இயற்கைப் பேரிடர்களும் அடிக்கடி ஏற்படுகின்றன.

Last modified on Friday, 25 January 2019 03:02
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd