web log free
July 13, 2025

மெக்சிகோ விபத்தில் 25 அகதிகள் பலி

 

மெக்சிகோவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், . 29 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சியாபாஸ் மாகாணத்தின், சோயலோ என்ற இடத்தில் உள்ள நெடுஞ்சாலையில் குறித்த அகதிகள் பயணித்த லொறி, கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

படுகாயமடைந்தவர்களுக்கு தேவையான அவசர உதவிகளை மெக்சிகோ செஞ்சிலுவை சங்கத்தினர், மனித உரிமை பாதுகாப்பு முகமையினர், உள்ளூர் பொலிஸாார் செய்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd