நிலத்தை அளவீடு செய்து கொடுப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பெற்றும் அதிகாரிகள் அலைக்கழித்ததால் அதிருப்தி அடைந்த இலங்கை அகதியொருவர் குடும்பத்துடன் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள கீழ்ப்புத்துபட்டு அகதிகள் முகாமை சேர்ந்த 50 வயதுடைய மனோரஞ்சிதம் என்பவரே இவ்வாறு தீக்குளிக்க முயன்றுள்ளார்.
இவரது பெயரிலும் இவரது சகோதரர் பெயரிலும் திண்டுக்கல் மாவட்டம் மணக்காட்டூர் பகுதியில் உள்ள நிலத்தை அருகில் வசிக்கும் வீராச்சாமி மற்றும் தங்கம் பொன்னைய்யா ஆகியோர் அனுபவித்து வரும் நிலையில் நீதிமன்றம் மூலம் தங்களுக்குரிய நிலத்தை அளவீடு செய்ய மனோரஞ்சிதம் உத்தரவு பெற்றார்
இந்த உத்தரவை உரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அந்த அதிருப்தியில் மனோரஞ்சிதம் தன் குடும்பத்தோடு நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன் தீக்குளிக்க முயன்றுள்ளார்
இதன்போது அங்குள்ள பொலிசார் அவர்களை தண்ணீர் ஊற்றி காப்பாற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.