web log free
October 14, 2025

அமெரிக்காவில் கட்டாய தடுப்பூசி திட்டம் இடைநிறுத்தம்

அமெரிக்காவில் பெரு நிறுவனங்களின் ஊழியா்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற அந்த நாட்டு அரசின் உத்தரவை முறையீட்டு நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

நூற்றுக்கு மேற்பட்டோா் பணியாற்றும் நிறுவனங்களுக்கு அரசு விதித்துள்ள விதிமுறைகளில், வரும் ஜனவரி 4 ஆம் திகதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியா்கள் வாராந்திர கொரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட வேண்டும், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் 5 ஆவது வட்ட மேல்முறையிட்டு நிதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd