web log free
March 28, 2024

வெங்கடேசப் பெருமானின் தீவிர பக்தராம் இலங்கைப் பிரதமர்

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச 2 நாள் புனித யாத்திரையாக திருப்பதிக்கு வியாழக்கிழமை வந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

திருப்பதி விமான நிலையம் வந்தடைந்த இலங்கை பிரதமருக்கு, துணை முதல்வர் கே.நாராயணசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் எம்.ஹரிநாராயணா தலைமையில் சித்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சாலை மார்க்கமாக திருமலை சென்றடையும் இலங்கை பிரதமர், மலையில் இரவு தங்குவார். மகிந்த ராஜபக்ச தனது குடும்ப உறுப்பினர்களுடன் வெள்ளிக்கிழமை காலை திருமலை கோவிலில் வழிபாடு நடத்துவார்.

வெங்கடேசப் பெருமானின் தீவிர பக்தரான இலங்கைப் பிரதமரின் 2 நாள் பயணத்துக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.இலங்கைப் பிரதமர் கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மலை நகருக்குச் சென்றிருந்தார். (இந்தச் செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது)

 

Last modified on Thursday, 23 December 2021 10:55