web log free
February 25, 2026

உக்ரைன் மீது குண்டு மழை பொழியும் ரஷ்யா

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனின் மத்திய, வடக்கு, தெற்கில் இருக்கும் நகரங்களில் இரவு நேரத்திலும் ரஷ்யப் படைகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது 12 ஆவது நாளாக ரஷ்யா போர் தொடங்கி தாக்குதல் நடாத்தி வருகின்றது.

முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு எதிராக உக்ரைன் இராணுவமும் கடுமையாகப் போராடி வருகின்றது. உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளன. மேலும் அந்நாட்டின் 02 அணுமின் நிலையங்களும் ரஷ்யா வசம் சென்றுள்ளது.     

 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd