web log free
April 19, 2024

அமெரிக்க துாதரகத்தின் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் - பெரும் பரபரப்பு

பாக்தாத்-ஈராக்கில் உள்ள அமெரிக்க துாதரகத்தின் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.இந்நிலையில், நேற்று ஈரானின் அண்டை நாடான ஈராக்கின் இர்பில் நகரில் உள்ள அமெரிக்க துாதரகத்தை குறிவைத்து, ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.இது குறித்து, அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:வடக்கு ஈராக்கின் இர்பில் நகரில் அமைந்துள்ள அமெரிக்க துாதரகத்தின் மீது, 12க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

 
latest tamil news

இந்த ஏவுகணைகள், அண்டை நாடான ஈரானில் இருந்து ஏவப்பட்டுள்ளன.எனினும், இந்த தொடர் தாக்குதல்களில் யாருக்கும் எந்த பாதிப்பும்ஏற்படவில்லை; உயிரிழப்புகள் எதுவும் இல்லை. கட்டடங்கள் மட்டும் சேதமடைந்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தாக்குதலில், அமெரிக்க துாதரகத்திற்கு அருகில் உள்ள ஒரு 'டிவி' சேனல் அலுவலகமும் சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு, அமெரிக்காவும் ஈராக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் குறித்து, விசாரணை துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அனைத்து விபரங்களும் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.