web log free
April 26, 2024

தனது கணவர் எனக் கருதி நாகப் பாம்புடன் வாழும் பாட்டி!!

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம் குல்லஹள்ளி கிராமத்தில் வசித்து வரும் மூதாட்டி மானஷா. இவரது கணவர் சரவவ்வா மவுனேஷ் கம்பாரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இந்நிலையில் தனியாக வசித்து வந்த மானஷாவின் வீட்டிற்குள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒரு நாகப் பாம்பு புகுந்துள்ளது. அதை கண்ட மானஷா, இறந்துபோன தனது கணவர்தான் நாகப்பாம்பாக மறுபிறவி எடுத்து வீட்டுக்கு வந்ததாக நம்பத் தொடங்கினார்.

மேலும் அந்த பாம்பிற்கு தொடர்ந்து பால் ஊற்றியும் வந்துள்ளார். அந்த பாம்பும் 4 நாட்களாக அவரது வீட்டிலேயே தங்கியிருந்தது. இதுபற்றி அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தவுடன், அவர்கள் அந்த பாம்பை பிடிக்க முயன்றனர்.

ஆனால் மானஷா பாம்பு உருவில் தனது கணவர் இருப்பதாக கூறி, மக்களிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இதுகுறித்து வனத்துறைக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.