web log free
October 18, 2025

தீ விபத்தில் தாய், குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

கனடா நாட்டின் ஒண்டாரியோ நகரில் உள்ள வீடு ஒன்றில் நேற்று திடீரென தீபிடித்தது. தீ மளமளவென பற்றி எரிந்தது.

இந்த விபத்தில் தாயும், நான்கு குழந்தைகளும் சிக்கி உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் தீயை போராடி அணைத்தனர்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd