web log free
May 07, 2024

ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி தனது நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், மக்களைக் கைவிடுவது தனது நோக்கம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். அதிபர் மாளிகை பாதுகாவலர்களின் வலியுறுத்தலின் பேரிலும், மக்கள் இரத்தம் சிந்தக்கூடாது என்பதற்காகவும்தான் காபூலில் இருந்து வெளியேறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

பல மில்லியன் டொலர்களை தான் அள்ளிச் சென்றதாக கூறப்பட்ட புகாரை மறுத்த அஷ்ரப் கனி, இது குறித்த எந்த விசாரணைக்கும் தயார் என்று குறிப்பிட்டுள்ளார்.