web log free
April 10, 2025

இந்தோனேசியா நாட்டின் பாண்டன் மாகாணத்தில் அமைந்துள்ள சிறையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் குறைந்தது 41 பேர் பலியாகியுள்ளனர், அதேபோல பலர் காயமடைந்துள்ளனர். 

இந்தோனேசியாவின் பான்டென் மாகாணத்தில் உள்ளது தங்கெராங்க சிறைச்சாலை. போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட மோசமான குற்றங்களில் ஈடுபட்டு கைதாகும் நபர்கள் இந்த சிறையில் தான் அடைக்கப்படுவார்கள் இந்த சிறையில் இந்தோனேசிய நேரப்படி அதிகாலை 2 முதல் 3 மணிக்குப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd