web log free
April 16, 2024
காபூல் ராணுவ மருத்துவமனையில் நடந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் 19 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர்.

வெடிகுண்டு வெடித்ததாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் காரி சயீத் கோஸ்டி தெரிவித்தார்.

கரகொட, யக்கலமுல்லாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய்க்கு பிறந்த குழந்தை பிறக்கும்போதே இறந்துள்ளது.

குழந்தையின் மரணம் குறித்து பிரேத பரிசோதனை நடத்திய காலி, கராப்பிட்டிய போதனா மருத்துவமனையின் பிரேத பரிசோதகர் சந்திரசேன லோகுகே, குழந்தையின் உடல் பாகங்களை மேலதிக பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, மரணம் குறித்து நேற்று வெளிப்படையான தீர்ப்பை வழங்கினார்.

இம்மாதம் 5 ஆம் திகதி குழந்தை பிறக்கவிருந்த நிலையில், அவர் 2 ஆம் திகதி காலியில் உள்ள மகமோதரா மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குழந்தையின் தாய் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் நடந்த பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கோவிட் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 5 ம் தேதி அவருக்கு குழந்தை பிறந்தது, குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது

இறந்த பிறகு குழந்தைக்கு பிசிஆர் செய்யப்பட்டது. இந்த சோதனையில், குழந்தைக்கு கோவிட் வைரஸ் பாதிக்கப்படவில்லை என்பதையும் உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் தாய் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸையும் ஏற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் 20-30 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளது. இதனால், வைரஸ் பரவலில் ஏற்பட்டுள்ள குறைவு, கடுமையான நோய் மற்றும் இறப்புகளில் வீழ்ச்சி போன்ற தடுப்பூசி இயக்கத்தின் முழு விளைவுகளும் ஒக்டோபர் மூன்றாவது வாரத்தில் தெரியவரும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார். 

மேலும் பத்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியின் முழு அளவையும் பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவித்தவற்றை தெரிந்துக்கொள்ள  எங்கள் செய்தித்தொகுப்போடு இணைந்திருங்கள்

#தடுப்பூசி