web log free
March 17, 2026

ஆயுதமேந்திய கும்பல்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை வடக்கில்.

யாழ்ப்பாணம் இணுவில் கிழக்கு பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் இரண்டு வாள்களை மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இணுவில் கிழக்குப் பகுதியில் ஆயுதக் கும்பல் நடமாடுவதாக இராணுவத்தினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் பிரகாரம் இராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான இரு கூரிய ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வீடொன்றை சோதனையிட்டுள்ளனர். வீட்டில் மற்றும் இரண்டு வாள்களுடன் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இணுவில் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனவும் அவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சுன்னாகம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd