web log free
September 03, 2025

மாத்தளையில் பாரிய வெடிப்பு சத்தம்


மாத்தளை, பலகடுவ வெலிக்கந்த பிரதேசத்தில், இன்று (04) பிற்பகல் பாரிய வெடிப்பு சத்தமொன்று கேட்டுள்ளது.

இதனையடுத்து, பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து அங்கு கடுமையான சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

அந்த பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயியொருவர் தன்னுடைய பயிர்நிலத்தை குரங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, எட்டு அங்குலம் நீளமான பைப்பொன்றில், பட்டாசுகளை போட்டு கொளுத்தியமையால் இவ்வாறு பாரிய சத்தம் எழும்பியதாகக் கூறப்படுகின்றது.

எனினும், அதனை ஏற்றுக்கொள்வதற்கு மறுத்த பொலிஸாரும் படையினரும் இணைந்து தேடுதலை ஆரம்பித்துள்ளனர்.

அந்த சத்தம், உக்குவளை பிரதேச செயலாளர் காரியத்துக்கு உட்பட்ட போவத்த, வரகாமுற, கலல்பிட்டிய, பலகடுவ உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பலருக்கும் கேட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்களிடத்தில் அச்சமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

பட்டாசு கொளுத்தியதாகக் கூறப்படும் நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்பதுடன், சுற்றிவளைப்பு தேடுதல்களும் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd