web log free
May 09, 2025

பொலிஸ் நிலைய மலசலகூடத்தில் கஞ்சா புகைத்த பொலிஸ் உத்தியோகத்தர்

பொலிஸ் நிலைய மலசலகூடத்தில் கஞ்சா புகைத்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரியின் சேவைகள் உடனடியாக அதிகாரிகளால் இடைநீக்கம் செய்யப்பட்டன.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகரின் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியவர் ஆவார்
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று (19) கழிவறைக்குள் ‘கஞ்சா’ புகைத்த போது கைது செய்யப்பட்டதாகவும், அவரது பையை சோதனையிட்ட போது சிறிய கஞ்சா பொதியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd