web log free
March 25, 2026

கம்பஹா மாவட்டத்தில் நீர் விநியோகத் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்று (22) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதனால் சுமார் 12 மணி நேரம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஸ்வதகேயாவ, பமுனுகம மற்றும் தல்டியாவத்த ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

22.12.2022 மாலை 06.00 மணி முதல் 23.12.2022 நள்ளிரவு 12.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd