web log free
July 04, 2025

IS அமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் காத்தான்குடியில் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய மற்றும் இரண்டு இந்தியர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (டிஐடி) ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளது.

மட்டக்களப்பு காத்தான்குடியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழகத்தின் கோயம்புத்தூரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இந்திய காவலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட இஸ்லாமிய தேசத்தின் (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரை, சந்தேக நபர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, இந்திய தேசிய புலனாய்வு பிரிவு  (என்ஐஏ) புதன்கிழமை கைது செய்ததை அடுத்து, இந்தக் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd