web log free
December 15, 2025

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ஐஸ் போதைப் பொருள் மீட்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப்பொருட்களின் கலாச்சாரம் அதிகரித்து தான் வருகிறது.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை கடற்கரை பகுதியில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் மற்றும் புலன் புலனாய்வு பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள்.

அப்பொழுது கடற்கரையில் இருந்து புறப்பட்ட ஒரு ஆட்டோவில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டார்கள். அந்த சோதனையின் போது தான் அவரிடம் ஐஸ் போதை பொருள் இருப்பது தெரியவந்து இருக்கிறது. பிரபலமான போதைப்பொருள் கடத்தல்காரர் இதை செய்தார் என்று போலீசார் கூறினார்கள்.

அவர்களிடம் இரண்டு கிலோ ஐஸ் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனுடைய சர்வதேச மதிப்பு சுமார் 2 கோடி இந்திய ரூபாய் இருக்கும். நடுக்கடலில் இலங்கை சேர்ந்த பிறகு போதை பொருள் மாற்றம் செய்யப்பட்டதாக அங்கிருந்து இது கடத்தி வரப்பட்டதாகவும் தெரிய வந்திருக்கிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd